TMB சாவரின் கோல்டு பாண்ட்
TMB அரசு வெளியிடும் சாவரின் கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்ய உதவுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்கத்தை நகைகள் அல்லது நாணயங்களாகக் கையாள அல்லது சேமிக்கத் தேவையில்லை
தங்கத்தை நகைகளாக அல்லது நாணயங்களாக சேமிக்கத் தேவைப்படாத பாதுகாப்பான தங்க முதலீடு
அரசு உத்தரவாதம் பெற்ற பத்திரங்கள்
திட்டத்தின் விதிமுறைகளின்படி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வட்டித் தொகை வழங்கப்படும்
ரிடம்ஷன் மதிப்பு முதிர்வு கால தங்க விலையைச் சார்ந்தது
கண்ணோட்டம்
சாவரின் கோல்டு பாண்டுகள் டிஜிட்டல் முறையில் தங்கத்தை வைத்திருப்பதற்கான ஒரு அங்கீகரிக்கப்பட்ட வழியை வழங்குகின்றன. முதலீட்டாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசால் வெளியிடப்படும், தங்கத்தின் கிராமைக் குறிக்கும் பாண்டு யூனிட்களை வாங்கலாம்.
தயாரிப்பு சிறப்பம்சங்கள்
அரசு உத்தரவாதம் அளிக்கும் பாதுகாப்பு , வெளிப்படையான விலை நிர்ணயம் போன்ற பலன்கள் மற்றும் தங்கத்தின் தரம், சேமிப்பு அல்லது அதைக் கையாளுதல் போன்ற கவலைகள் இல்லை இதன் சிறப்பம்சங்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நிலையான வட்டி கிடைப்பது மற்றும் முதிர்வு கால தங்க விலையை அடிப்படையாகக் கொண்ட ரிடம்ஷன் மதிப்பு ஆகியவையாகும்.
அம்சங்கள் மற்றும் நன்மைகள்
இந்தத் திட்டம், நிலையான வட்டி வருமானம் மற்றும் டிஜிட்டல் அல்லது சான்றிதழ் வடிவில் முதலீட்டை வைத்திருக்கும் வசதியுடன், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான எளிமையான வழியை வழங்குகிறது. இது தங்கத்தை நகைகள் அல்லது நாணயங்களாகப் பராமரிப்பது குறித்த கவலைகளை நீக்குவதுடன், நீண்ட கால முதலீட்டுத் திட்டமிடலுக்கு உதவுகிறது.
தகுதி
திட்டத்தின் விதிமுறைகளின்படி இந்தியக் குடிமக்கள், HUF, அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாவரின் கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்யலாம். NRI கள் முதலீடு செய்ய முடியாது ஆனால் ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து வைத்திருக்கலாம்